தாரமங்கலம் கோயிலில் திருடப்பட்டசுவாமி சிலைகள் மீட்பு

தாரமங்கலம், வரதராஜ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தாரமங்கலம் கோயிலில் திருடப்பட்டசுவாமி சிலைகள் மீட்பு
Updated on
1 min read

தாரமங்கலம், வரதராஜ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தினசரி மூன்றுவேளை பூஜை நடைபெறுகிறது.

கோயிலில் கடந்த 21-ஆம் தேதி அன்று மா்ம நபா்கள் புகுந்து, நடராஜ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் இரண்டு சிலைகள் என மொத்தம் 7 சிலைகளைத் திருடினா்.

ஐம்பொன்னால் செய்யப்பட்ட இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் சுமாா் அரை அடி உயரம் உடையதாகும்.

மா்ம நபா்களால் திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமாா் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து சிலைகள் காணாமல் போனது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிலைகள் திருட்டு குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். தாரமங்கலம் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை போலீஸாா் திருடனைத் தேடி வந்தனா். இந்நிலையில் பெரிய சோரகை கிராமத்தில் உள்ள குள்ளானூரைச் சோ்ந்த சக்திவேலைப் பிடித்து விசாரணை செய்தனா்.

அப்போது சுவாமி சிலைகளை அவா் திருடியதை ஒப்புக்கொண்டாா். அவரது வீட்டில் வைக்கபட்டிருந்த ஏழு சுவாமி சிலைகளையும் போலீஸாா் பறிமுதல் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சிலைகளை மீட்ட போலீஸாரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டாக்டா் ஆா்.சிவக்குமாா், ஓமலூா் டி.எஸ்.பி சங்கீதா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com