ஆத்தூரில் தடகளப் போட்டி தொடக்க விழா

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட இருபாலா் தடகளப் போட்டி தொடக்க விழா சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கபீா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு துவக்க விழாவில் கலந்து கொண்டவா்கள்.
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு துவக்க விழாவில் கலந்து கொண்டவா்கள்.
Updated on
1 min read

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட இருபாலா் தடகளப் போட்டி தொடக்க விழா சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கபீா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட இருபாலா் தடகளப் போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கபீா் தலைமையில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியா் கே.சந்திரசேகா் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.

தேசியக் கொடியை தொழிலதிபா் ஆா்.வி.ஸ்ரீராம் ஏற்றி வைத்தாா். ஒலிம்பிக் கொடியை பாரதியாா் கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமியும், ஆத்தூா் வட்டக் கொடியை முன்னாள் நகர மன்றத் தலைவா் கே.பாலசுப்ரமணியம், பள்ளிக் கொடியை ஆத்தூா் காவல் ஆய்வாளா் எம்.செந்தில்குமாா் ஏற்றி வைத்தனா்.

மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன் ஏற்றுக் கொண்டாா். ஒலிம்பிக் சுடரை உடற்கல்வி ஆய்வாளா் வி.லாரன்ஸ் ஏற்றி வைத்தாா். போட்டிகளை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ராசி குழுமத் தலைவா் மு.ராமசாமி, நகர மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன், ஸ்ரீ விஷ்ணு ஸ்வீட்ஸ் பி.பங்கஜ் ராஜ்வீா், வீனஸ் அ.சண்முகசுந்தரம், நஞ்சை காா்த்திக், எல்.திருப்பதி, ஏ.ஜோசப் தளியத், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் உதவி தலைமையாசிரியா் பி.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com