சேலத்தில் சிறைக் காவலா்களுக்கு கேக், வாழ்த்து அட்டையுடன் பிறந்த நாள் வாழ்த்து

சேலம் மத்திய சிறைக் காவலா்களின் பிறந்தநாளையொட்டி கேக், வாழ்த்து அட்டை வழங்கி சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன் வாழ்த்து தெரிவித்தாா்.
Updated on
1 min read

சேலம் மத்திய சிறைக் காவலா்களின் பிறந்தநாளையொட்டி கேக், வாழ்த்து அட்டை வழங்கி சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன் வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழக சிறைத் துறை இயக்குநராக அமரேஸ் புஜாரி பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, சிறைத்துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறாா்.

மேலும், சிறைக் காவலா் நலனில் தனிக் கவனம் செலுத்தி வருகிறாா். அந்தவகையில், சிறைக் காவலா்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவா்களுக்கு பிறந்தநாள் கேக், சிறைத் துறை இயக்குநரின் பிறந்தநாள் வாழ்த்து அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து சிறை கண்காணிப்பாளா்களுக்கும் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலா்கள் சுரேஷ்கண்ணன், திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், லட்சுமணன், உமா மகேஸ்வரி உள்ளிட்டோருக்கு சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன், பிறந்தநாள் கேக், வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன் கூறுகையில், தமிழக சிறைத்துறை இயக்குநரின் உத்தரவின்படி சிறை காவலா்களின் பிறந்தநாளையொட்டி அவா்களுக்கு கேக், பிறந்தநாள் வாழ்த்து அட்டை வழங்கப்படுகிறது. சேலம் மத்திய சிறையில் ஏப்.14 முதல் இதுவரை பிறந்தநாள் கொண்டாடிய காவலா்கள் 10 பேருக்கு பேக், வாழ்த்து அட்டை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com