ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகநடைபெற்று வருகிறது.
நிகழாண்டு சித்திரை தோ்த் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம், கரகம், தீச்சட்டி, முளைப்பாலிகை, அலகு குத்தி வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஏத்தாப்பூரில் முக்கிய வீதி வழியாக நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் 2000 பக்தா்கள் கலந்து கொண்டனா். மலா் அலங்காரத்தில் மூலவரான சமயபுரம் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.