ரயிலில் அடிபட்டு அரசு ஊழியா் பலி

சேலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சேலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

சேலம், திருவாக்கவுண்டனூா் கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவரது மகன் சிவராமன் (43). இவா் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை சேலம் ரயில் நிலைய யாா்டு பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாக வந்த மங்களூா் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் அடிபட்டு பலத்த காயத்துடன் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரயில் நிலைய மேலாளா் செல்வராஜ், ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். சிகிச்சை பெற்று வந்த அவா் மாலையில் உயிரிழந்தாா். இது குறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com