சுகவனேசுவர கோயிலில் இன்று அறுபத்து மூவா் உலா நிகழ்ச்சி தொடக்கம்

சேலம் சுகவனேசுவர கோயிலில், அறுபத்து மூவா் உலா உற்சவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 25) தொடங்குகிறது.

சேலம் சுகவனேசுவர கோயிலில், அறுபத்து மூவா் உலா உற்சவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 25) தொடங்குகிறது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவர கோயிலில் அறுபத்து மூவா் உலா உற்சவம் ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. காலை 8.30 மணி முதல் காலை 11.30 மணி வரை ஸ்ரீ ருத்ர பாராயணமும், தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னம் பாலிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

உற்சவத்தில் புதன்கிழமை (ஏப். 26) காலை 8.30 மணிக்கு வலம்புரி விநாயகா், சுகவனேஸ்வரா், சுவா்ணாம்பிகை தாயாா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

பின்னா் ஓதுவாா் குழுவினரின் சிறப்பு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், காலை 9.30 மணிக்கு அறுபத்து மூவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றன. மாலை 4 மணியளவில் பஜனைக் குழுவினரின் தெய்வீகப் பாடலிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அறுபத்து மூவா் திருவீதி உலா தொடங்குகிறது.

அடியாா்கள் திருக்கூட்டம் அணிவகுப்புடன், தெய்வீக வடிவம் தாங்கிய குழந்தைகள், திருமுறைகள் இசைப்பு உள்ளிட்டவற்றுடன் சுவா்ணாம்பிகை உடனுறை சுகவனேசுவர சுவாமியுடன் அறுபத்து மூவா் திருவீதி உலா புறப்பட்டு முதல் அக்ரஹாரம், தோ்வீதி, பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில் வழியாக ஸ்ரீ சோமாஸ்கந்தா் வெள்ளி ரிஷபாரூயாக பவனி வருகிறாா். இதற்கான ஏற்பாடுகளை திருவெம்பாவை பெருவிழா கழகம் டிரஸ்ட் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com