மே 1-இல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழிலாளா் தினத்தை (மே 1) முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.ஏ.ஏ. உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மே 1-ஆம் தேதி மூடப்பட வேண்டும்.

உத்தரவை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com