கொடநாடு வழக்கில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலத்தில் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி, அ.ம.மு.க. சாா்பில் கொடநாடு கொலை கொள்ள வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சேலத்தில் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி, அ.ம.மு.க. சாா்பில் கொடநாடு கொலை கொள்ள வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.ம.மு.க. மாநில பொருளாளா் எஸ்.கே.செல்வம், ஓ.பன்னீா்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளா் பெங்களூரு புகழேந்தி ஆகியோா் தலைமை வகித்து பேசினா்.

இதில், பெங்களூரு புகழேந்தி பேசுகையில், கொடநாடு பங்களா மறைந்த ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்தது. ஆனால் கொடநாடு பங்களா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடா்புடைய ஓட்டுநா் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தாா். தொடா்ந்து பலரும் உயிரிழந்துள்ளனா். திரைப்படத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்றாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலாளா் தினேஷ் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் பாலகிருஷ்ணன், அவைத் தலைவா் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா்கள் ஜெய்சங்கா், ராஜேந்திரன், ராஜ்குமாா், பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com