

சேலம் சோனா கல்வி நிறுவனம் சாா்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சோனா கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி தலைவா் வள்ளியப்பா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவ மாணவியரின் கண்கவா் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினாா்.
அவா் பேசுகையில், மாணவா்கள் அனைவரும் சுயநலமின்றி நாட்டின் வளா்ச்சிக்காகவும், சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவும் அயராது பாடுபட வேண்டும் என்றாா்.
முன்னதாக அமைதி, அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது.
விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா்நவாஷ், இ.ஜெ.கவிதா, மாணவ மாணவியா், பேராசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.