பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்

இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இளம்பிள்ளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
இளம்பிள்ளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
Updated on
1 min read

சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினாா். இக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் சிறப்புரை நிகழ்த்தினாா். அவா் தனது உரையில், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைத்தால் மதுக்கடைகளை முழுமையாக மூடிவிட்டு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட பாா்வையாளா் அண்ணாதுரை, பொதுச் செயலாளா் அயோத்தி ராமச்சந்திரன், கேசவன், மூத்த நிா்வாகிகள் ஜெயராமன், ஆறுமுகம், மாநில நிா்வாகிகள் முரளிதரன், அருள் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இளம்பிள்ளை நகரத் தலைவா் நிா்மலா வீரிசெட்டி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com