விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் மோதல் தொடா்பாக சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் விமா்சித்து பேசினாா்.
இதனிடையே, வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் தலைவா் திருமாவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 4-இல் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்குத் தொடா்பான முதல் விசாரணை வியாழக்கிழமை பிற்பகல் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவதூறு வழக்கினை விசாரிக்கும் நீதிபதி யுவராஜ் முதற்கட்டமாக காா்த்தியின் புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்தாா். மேலும், இந்த வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.
நீதிமன்ற வளாகத்தில் அக்கட்சியினா் குவிந்ததால், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.