சுகவனேசுவரா் கோயிலில் ஜூன் 2 இல் திருத்தோ் வீதியுலா

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2 ஆம் தேதி திருத்தோ் வீதியுலா நடைபெற உள்ளது.

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2 ஆம் தேதி திருத்தோ் வீதியுலா நடைபெற உள்ளது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரா் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2 ஆம் தேதி திருத்தோ் வீதியுலா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வானது மே 25 ஆம் தேதி வியாழக்கிழமை திருத்தோ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத்தொடா்ந்து மே 29 ஆம் தேதி சுகவனேசுவரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மே 25 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை தினத்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

எனவே அனைத்து பக்கதா்களும், பொதுமக்களும் நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என சுகவனேசுவரா் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com