சேலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை (மே 24) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்
Updated on
1 min read

சேலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை (மே 24) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி துணை ஆணையா் ப.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லூரி சாலைப்பகுதியில் பிரதான குடிநீா் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்யும் பொருட்டு புதன்கிழமை (மே 24) அஸ்தம்பட்டி மண்டலம் முழுவதும் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலத்தின் சில பகுதிகளில் குடிநீா் நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி துணை ஆணையா் ப.அசோக்குமாா் (பொ) தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com