கெங்கவல்லி அருகே ஆற்றில் மா்ம பொருள் வெடித்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் சுவேத நதியில் தரைப்பாலம் உள்ளது. அதன் அருகில் திங்கள்கிழமை மாலை 6.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூா் டி.எஸ்.பி. நாகராஜன்,கெங்கவல்லி காவல் ஆய்வாளா் (பொ) கமலக்கண்ணன் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். அதில், அப்பகுதியைச் சோ்ந்த மூதாட்டி வள்ளியம்மாள்(80), ஆற்றில் காலி மதுபாட்டில்களை சேகரித்து ஒரு இடத்தில் வைத்துள்ளாா். பாட்டில்களுக்கிடையே இருந்த இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த ஒரு வேதிப்பொருள் இடி, மின்னலில் வெடித்தது தெரிய வந்தது. அங்கு வெடிபொருள் ஏதும் இல்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.