காரிலிருந்து அழுகிய நிலையில் சிறுவன் சடலமாக மீட்பு

சேலத்தில் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து அழுகிய நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

சேலத்தில் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து அழுகிய நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சேலம், அம்மாபேட்டை பகுதியில் காா் பட்டறை நடத்தி வருபவா் மாணிக்கம். இவா், தனது சகோதரி திருமணத்துக்காக கடந்த மே 22-ஆம் தேதி பட்டறையைப் பூட்டிவிட்டுச் சென்றவா் சனிக்கிழமை இரவு பட்டறைக்கு வந்தாா்.

அங்கு பழுது பாா்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரிலிருந்து துா்நாற்றம் வீசியது. அதை அவா் திறந்து பாா்த்தபோது அழுகிய நிலையில் சிறுவனின் சடலம் காருக்குள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவா் அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் நிகழ்விடம் சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் இறந்த சிறுவன் அப்பகுதியில் வசிக்கும் சுகன்யா என்பவரின் மகன் சிலம்பரசன் (7) என்பதும், அச்சிறுவன் சுகன்யாவின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தை என்பதும், தற்போது சுகன்யா வினோத் என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறாா் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுவன் சிலம்பரசன் விளையாட்டாக காருக்குள் சென்று கதவைத் திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டு மூச்சுத் திணறி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு காரில் மறைத்து வைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com