மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

கெங்கவல்லி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில், மின்னல்தாக்கி பசுமாடு உயிரிழந்ததுடன், மூன்று தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

கெங்கவல்லி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில், மின்னல்தாக்கி பசுமாடு உயிரிழந்ததுடன், மூன்று தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையில், வீரகனூரில் ஒரு புளியமரம் அடியோடு சாய்ந்தது. புங்கவாடியில் துரைராஜ் என்பவரது பசுமாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது. மேலும் நடுவலூரில் ஜோதி என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் 3 தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று மரங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் மூன்று மரங்களும் பட்டுப்போய்விட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com