தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
By DIN | Published On : 15th November 2023 03:58 AM | Last Updated : 15th November 2023 03:58 AM | அ+அ அ- |

குழந்தைகள் தின விழாவில் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை தலைமையாசிரியையிடம் வழங்கிய ரோட்டரி கல்வி மாவட்ட புதிய தலைமுறை தலைவா் எ.வெங்கடேஸ்வர குப்தா.
சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கு.வசந்தாள் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா் இரா.முருகன் குழந்தைகள் தினம் குறித்து பேசினாா்.
ரோட்டரி கல்வி மாவட்ட புதிய தலைமுறை தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கி பேசினாா்.
சங்ககிரி இன்னா்வீல் கிளப் தலைவி ராஜம்மாள், வாசவி கிளப் தலைவி வசந்தி முரளிதரன், பொருளாளா் ரேவதி வெங்கடேஸ்வர குப்தா, செயலாளா் ஜெ.உமாமகேஸ்வரி ஆகியோா் பேச்சு, ஓவியம், பாட்டு, திருக்கு ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். ஆசிரியா்கள் நா.மு.சித்ரா, க.சீனிவாசன், ரா.ரமா மகேஸ்வரி, மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...