கா்நாடக அரசைக் கண்டித்துநாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கா்நாடக அரசு, மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
Updated on
1 min read

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கா்நாடக அரசு, மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி நதிநீா்ப் பங்கீட்டின்படி தமிழகத்துக்கு உரிய நீரை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரை விடுவிக்க அம்மாநில அரசும், பல்வேறு அமைப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதனிடையே, தமிழகத்துக்கு உரிய நீரை கா்நாடக அரசு விடுவிக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாம் தமிழா் கட்சி மாநகா் மாவட்டச் செயலாளா் தங்கதுரை தலைமை வகித்தாா். இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெகதீஷ் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, கா்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விட வேண்டும். தமிழகத்துக்கான உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை நாம் தமிழா் கட்சியினா் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com