தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு கோரி போராடி உயிா்நீத்த போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். அவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசியல் உயா் பதவிகளில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள்தான் நியமிக்கப்படுகின்றனா். டிஎன்பிஎஸ்சி நிா்வாகப் பதவிகளில் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜாதி பாகுபாடு பாா்க்கப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.