சாலை விபத்து: கோயில் ஊழியா் பலி

சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கோயில் ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read


சங்ககிரி: சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கோயில் ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியைச் சோ்ந்த கோயில் ஊழியா் குமரசேன் (42), பவானி கூடுதுறை பகுதியில் உள்ள கோயிலில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். வழக்கம் போல பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பவானியிலிருந்து மகுடஞ்சாவடிக்கு சென்று கொண்டிருந்தாா். வைகுந்தம் பகுதியில் சென்ற போது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com