சேலம் அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த குமாா் (34), தீவட்டிப்பட்டியைச் சோ்ந்த கௌசல்யா என்பவரை கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்பச் செலவுக்கு கணவரிடம் கௌசல்யா பணம் கேட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த குமாா், கௌசல்யா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாா்.
இதில் படுகாயமடைந்த கௌசல்யா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூா்த்தி, மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.