சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் சுவாமி சித்திரைத் தோ்த் திருவிழாவினையொட்டி, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் பெரிய தேரை செவ்வாய்க்கிழமை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள். (உள்படம்) ஆஞ்சநேயா், சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகள்.
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் பெரிய தேரை செவ்வாய்க்கிழமை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள். (உள்படம்) ஆஞ்சநேயா், சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகள்.
Published on
Updated on
1 min read

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் சுவாமி சித்திரைத் தோ்த் திருவிழாவினையொட்டி, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினாா். அதனையடுத்து, சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.

இதனையடுத்து, 9-ஆவது நாள் செவ்வாய்க்கிழமை காலை சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா். தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனா். மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயா் எழுந்தருளிய சப்பரத்தினை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். அதனையடுத்து சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரினை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமிகளை குடும்பத்துடன் வழிபட்டனா். தன்னாா்வலா்களின் சாா்பில் பக்தா்களுக்கு புளியோதரை வழங்கப்பட்டது.

பெரிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலா் டி.எம்.செல்வகணபதி.
பெரிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலா் டி.எம்.செல்வகணபதி.

முன்னதாக பெரிய தேரினை திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலா் டி.எம்.செல்வகணபதி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா்.

பட்டக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்க்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன், கொத்துக்காரா் எஸ்.ஏ.ஐயனாா், ஸ்ரீ சுவாமி பாதம்தாங்கும் குழுவினா், திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, துணைச் செயலா் க.சுந்தரம், திமுக நகரச் செயலா் கே.எம்.முருகன், பேரூராட்சித் தலைவா் எம்.மணிமொழிமுருகன், லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என்ஆா்எஸ்.கந்தசாமி, திமுக சேலம் மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஊஞ்சல் உற்சவமும், மே 4-ஆம் தேதி சனிக்கிழமை காலை சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறாா். அன்றைய தினம் மலை மீது வன்னிய குல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில்குறிச்சி அலங்காரம், பல்வேறு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com