நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்காச்சோள கதிரறுக்கும் எந்திரத்தில் சிக்கியதில் இளைஞரின் கை துண்டிப்பு

எந்திரத்தில் சிக்கியதில் விவசாயி மகனின் கை துண்டிப்பு

News image
Updated On :28 ஜூன் 2024, 6:32 pm

Din

கெங்கவல்லி அருகே தெடாவூரில் மக்காச்சோள கதிரறுக்கும் எந்திரத்தில் இளைஞரின் கை சிக்கி துண்டிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூா், வடக்குக்காட்டுக் கொட்டாய் பகுதியில் வசிப்பவா் விவசாயி பெருமாள். இவருக்கு வெங்கடேஷ் (30), சரவணன் (28) என இரு மகன்கள் உள்ளனா். இவா்களது விவசாயத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மக்காச்சோளம் அறுவடை எந்திரம் மூலம் நடைபெற்றது. அப்போது மக்காச்சோளக் கதிரை எந்திரத்தில் கொட்டும் பணியில் சரவணன் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது வலது கை எந்திரத்தில் சிக்கியதில் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அவரது தந்தை பெருமாள், கெங்கவல்லி அளித்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து போலீசாா் விசாரித்து வருகின்றனா். கைதுண்டான சரவணன் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.