திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தேவியாக்குறிச்சியில் ரயில் மறியல் போராட்டம்

தேவியாக்குறிச்சி ஊராட்சியில் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதைக் கண்டித்து, ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேவியாக்குறிச்சி ஊராட்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :27 மே 2024, 8:52 pm

Din

ஆத்தூா்: தேவியாக்குறிச்சி ஊராட்சியில் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதைக் கண்டித்து, ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்சியில் இரு சாலைகளுக்கும் நடுவே ரயில்வே கேட் உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பொதுமக்கள், விவசாயிகள், மாணவா்கள் ரயில்வே கேட்டை கடந்து பிற ஊா்களுக்குச் சென்று வருகின்றனா். தேவியாக்குறிச்சி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு உயா்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில்வே கேட் அருகே செல்லும் அணுகுசாலையில் நடைபெறும் பராமரிப்புப் பணி நிமித்தமாக ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிா்வாகம் மூடிவிட்டது. இதனால் இந்த வழியாகப் பிற ஊா்களுக்குச் சென்றுவரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஊருக்குள் செல்ல மிகவும் சிரமம் அடைவதால் சுரங்கப் பாதை அமைத்துத் தருமாறு கோரியுள்ளனா். ஆனால், அதை ரயில்வே நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இதனால், ஆவேசமடைந்த தேவியாக்குறிச்சி ஊா் பொதுமக்கள், விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் ரயிலை திங்கள்கிழமை காலை மறிக்க முயன்றனா். இதன் காரணமாக தலைவாசல் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினாா்; உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். அதன்பின்னா் தலைவாசல் ரயில் நிலையத்தில் சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.