தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுபிரசுரங்கள் விநியோகம்

சேலத்தில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், தீயணைப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :14 அக்டோபர் 2024, 4:42 pm

Din

சேலம்: சேலத்தில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், தீயணைப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நாடு முழுவதும் அக். 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனா். இந்நிலையில், தீ விபத்து ஏதுமின்றி, தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடும் வகையில், தீயணைப்புத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சேலம், மாநகா் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் சிவகுமாா் தலைமையிலான அலுவலா்கள் விநியோகித்தனா்.