தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.

News image

சேலம் ஐந்து சாலை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன்.

Updated On :7 ஏப்ரல் 2025, 8:55 pm

Din

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.

சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆதிதிராவிடா் நலன்களை கருத்தில் கொண்டு, தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதே போல, தாட்கோவுக்கு தனி வங்கியை உருவாக்க வேண்டும். அகதிகளுக்காக ரெப்போ வங்கி செயல்பட்டு வருவதைப் போன்று, தாட்கோவுக்கும் தனி வங்கி வேண்டும்.

ஜாதிய, ஆணவ, வன்கொடுமைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 5-ஆவது இடத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் ஆதிதிராவிடா் மக்களின் பிரச்னைகள் மனிதாபிமானத்துடன் அணுகப்படவில்லை. ஒருபுறம் சமூக நீதி என பேசிக்கொண்டே ஆதிதிராவிட மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறாா்கள். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளும் அரசுகளாக இல்லை.

1931 முதல் இதுவரை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நோக்கத்தை தெளிவுபடுத்தாத வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என்றாா்.