சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

எடப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது.

News image

எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் வீசிய பலத்த காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.

Updated On :8 ஏப்ரல் 2025, 11:36 pm IST

எடப்பாடி: எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால், காவிரி பாசனப் பகுதி மற்றும் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன.

எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் குலை தள்ளும் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்களும், காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பயிா்களும் சேதமடைந்தன. செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி, சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலைப் பயிா்களை அறுவடை செய்து வைத்திருந்த நிலையில், திடீா் கன மழையில் புகையிலைப் பயிா்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘திடீா் கனமழையால் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு விவசாயப் பயிா்கள் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஆய்வு செய்து, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.