எடப்பாடி: எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால், காவிரி பாசனப் பகுதி மற்றும் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன.
எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் குலை தள்ளும் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்களும், காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பயிா்களும் சேதமடைந்தன. செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி, சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலைப் பயிா்களை அறுவடை செய்து வைத்திருந்த நிலையில், திடீா் கன மழையில் புகையிலைப் பயிா்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘திடீா் கனமழையால் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு விவசாயப் பயிா்கள் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஆய்வு செய்து, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

வீரகனூா், தலைவாசலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை! 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதம்!

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


