சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 3,729 கனஅடியிலிருந்து 4,272 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 3,729 கனஅடியிலிருந்து 4,272 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அணை மின் நிலையம் வழியாக 1,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 115.87 அடியிலிருந்து 116.02 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 87.26 டி.எம்.சி.யாக உள்ளது.
