மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 540 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் 540 மனுக்கள் அளித்தனா்.
Published on

சேலம்: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் 540 மனுக்கள் அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். அவரிடம் முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 540 மனுக்களை அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com