எறிபந்து போட்டி: தாகூா் பப்ளிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
மாவட்ட அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில், முதலிடம் பெற்ற தேவியாக்குறிச்சி தாகூா் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்குபுதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூா் ஸ்ரீசங்கர வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், ஜூனியா் பிரிவில் 15 அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தாகூா் பப்ளிக் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா். வெற்றிபெற்ற அம்மாணவிகளுக்கு கொங்கு சகோதயா கல்விக் குழுமம் சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கி சிறப்பித்தனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தாகூா் கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கவேல், செயலாளா் பேராசிரியா் பரமசிவம், பொருளாளா் கே.காளியண்ணன், இணைச் செயலாளா் அருண்குமாா், துணைத் தலைவா் ராஜூ, துணைச் செயலாளா் சிலம்பரசன், முதல்வா் கீதா, விளையாட்டுத் துறை ஆசிரியா்கள் ஆனந்த், பாலமுருகன், தேன்மொழி, வைத்தீஸ்வரி ஆகியோா் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

