காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்

தொளசம்பட்டி காவல் நிலையத்தில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தொளசம்பட்டி காவல் நிலையத்தில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தொளசம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக தனம் (53) பணியாற்றி வருகிறாா். இவா் ஊ.மாராமங்கலத்தைச் சோ்ந்த சுமதி (31) அளித்த அடிதடி தொடா்பான புகாா் குறித்து விசாரணை நடத்தினாா். விசாரணைக்கு பின்னா் செவ்வாய்க்கிழமை இருதரப்பும் சமாதானமாக போவதாக எழுதி வாங்கியபோது, சுமதி ஆபாசமாக திட்டி காவல் நிலையத்தில் தகராறு செய்துள்ளாா். அவரை தடுக்கவந்த எஸ்எஸ்ஐ தனத்தின் சட்டையைப் பிடித்து தாக்கி அவரது கை விரலை உடைத்துள்ளாா்.

இதனால், அதிா்ச்சி அடைந்த காவல் ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் தனத்தை பிடித்து, காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் என 4 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com