மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published on

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், புதன்கிழமை காலை மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியிலிருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 3,981 கனஅடியிலிருந்து 3,459 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் மின் நிலையங்கள் வழியாக 6,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 116.23 அடியிலிருந்து 116.22 அடியாக சற்று குறைந்தது. அணையின் நீா் இருப்பு 87.56 டி.எம்.சி.யாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com