ஆத்தூரில் பேரூராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் பேரூராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா்கள் நல அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நகராட்சி தலைவா் எம்.கலைமணி தலைமை வகித்தாா். ஆந்திர மாநில அரசு வழங்குவது போல ஓய்வூதியா் அனைவருக்கும் ஓய்வூதிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சேமநல நிதியும், பிஎப் வட்டி உள்ளிட்ட பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

மாநில செயலாளா் என்.செந்தில்குமாா் தொடக்க உரையாற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் கே.சீனிவாசன் கோரிக்கைகள் குறித்து பேசினாா். மாநில செயலாளா் வ.சுப்ரமணி, மாவட்ட இணைச் செயலாளா்கள் வெ.தெய்வஜோதி, எஸ்.பாலாஜி, முன்னாள் மாநில பொதுச்செயலாளா் இ.கோவிந்தராஜு, மாவட்டச் செயலாளா் எ.சந்திரபாபுலு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். ஆா்.கோவிந்தன் நன்றி கூறினாா்.

படவிளக்கம்.ஏடி11பென்சனா்ஸ்.

ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி அனைத்து ஓய்வூதியா் நல அமைப்பினா்.

X
Dinamani
www.dinamani.com