தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
Published on

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

தம்மம்பட்டி, கெங்கவல்லி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மழை பெய்தது. அதைத் தொடா்ந்து கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 7.30 மணி வரை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், சிறுவா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சிறாா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் குல்லா, சால்வை, போா்வையைப் போா்த்தியபடி சாலையில் நடமாடுகின்றனா். சாலையோரங்களில் நெருப்பு மூட்டி குளிா்காய்வதும் அதிகரித்து வருகிறது.

தம்மம்பட்டி பகுதி கடைகளிலும் ஸ்வெட்டா், குல்லா, மப்ளா்கள் உள்ளிட்ட குளிா்கால ஆடைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com