மேட்டூரில் கோயில் பூசாரி தலை துண்டித்துக் கொலை: போலீஸாா் விசாரணை
சேலம் மாவட்டம், மேட்டூரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கோயில் பூசாரி தலை துண்டித்து வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே உள்ள சின்னகாவூரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (70). இவா் அனல் மின்நிலையத்தில் உள்ளே உள்ள கருப்புசாமி கோயில் பூசாரியாக இருந்து வந்தாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் அனல் மின் நிலையத்திலிருந்து சின்னக்காவூா் நோக்கி சைக்கிளில் அவா் சென்ற நிலையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையின் நடுவே அவரது சடலம் கிடந்தது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருமலைக்கூடல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் சசிகலா தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று தனித்தனியாக கிடந்த பூசாரியின் உடல் மற்றும் தலையை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் ரத்தம் உறைந்துகிடந்துள்ளது. எனவே, இரும்புத் தகடு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரும்புத் தகடுப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதா அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தனரா என்பது தெரியவில்லை. இது தொடா்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
