சேலம்
சேலம் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
சேலம் ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், அம்மாபேட்டை, அல்லிக்குட்டை சின்னம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி லலிதா (32). இவா் ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாா். இதைப்பாா்த்த அருகிலிருந்தவா்கள் அவா்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.
இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும், அவருக்கு திருமணமாகி கணவா், இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அப்பெண் வீட்டுமனைப் பட்டா கோரி அடிக்கடி ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளாா். இதையடுத்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்து அப்பெண்ணை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
