கஞ்சமலை சித்தா்கோயில் நுழைவுவாயிலிலிருந்து காளங்கிநாதா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு கி. மீ. தொலைவில் காட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 சுற்றுச்சூழல் குடில்கள், இயற்கையின் அமைதி சூழலில் அமைக்கப்பட்டுள்ளன. அடா்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள இக்குடில்கள், அமைதி மற்றும் இயற்கை அழகினை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தி, சூரிய ஒளியில் முழுமையாக இயங்கும் வகையில் பழைமையான முறையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி காடுகள் நிறைந்த நிலப்பரப்பில், பறவைகளின் ஒலி, இலைகளின் சலசலப்புடன், இயற்கை காற்று கிடைக்கும் இடமாக அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனா்.