தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
மேட்டூா் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டாபுரம் சிவசக்திநகா் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாபு (30). இவா் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வந்தாா்.
இவருக்கு புனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். இந்தநிலையில் சனிக்கிழமை மாலை பாபு வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சூரப்பள்ளி அருகே பச்சகுப்பனூா் பகுதியில் முட்புதரில் பாபு இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து ஜலகண்டாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாபுவை யாரேனும் கொலை செய்து முட்புதரில் வீசினாா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகிறனா்.
