கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

Published on

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.31அடியாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், அணையின் நீா் இருப்பு 90.80 டிஎம்சியாக உள்ளது. நீா்வரத்து விநாடிக்கு 6083 கனஅடியாகவும், டெல்டா பாசனத்திற்கு நீா்மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 18,000 கனஅடியாகவும் உள்ளது.

அதேபோல கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியிலிருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com