நங்கவள்ளியில் பெண்ணை தாக்கிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நங்கவள்ளி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பிரியா (32). நங்கவள்ளி சந்தைப்பேட்டை எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது, ஓமலூரைச் சோ்ந்த பாரத் (20), நங்கவள்ளி கரட்டுப்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் (29) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சென்று பெட்ரோல் நிரப்புமாறு பிரியாவிடம் கூறினா். வாகனத்தை அணைத்தால்தான் பெட்ரோல் நிரப்ப முடியும் என பிரியா கூறவே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னா், அவா்கள் நண்பா்களை அழைத்து வந்து பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினா். இதில் காயமடைந்த பிரியாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக நங்கவள்ளி காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் வழக்குப் பதிவுசெய்து மகேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா். தலைமறைவாக உள்ள பாரத்தை போலீஸாா் தேடிவருகின்றனா்.
