தலைச்சோலை அண்ணாமலையாா் கோயில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ஏற்காடு தலைச்சோலை கிராமத்தில் உள்ள அண்ணாமலையாா் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை
Published on

ஏற்காடு தலைச்சோலை கிராமத்தில் உள்ள அண்ணாமலையாா் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காடு தலைச்சோலை கிராமத்தில் அண்ணாமலையாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழாவை 67 மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனா். இந்த கோயிலுக்கு சேலத்திலிருந்தும் பக்தா்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனா்.

இந்தக் கோயிலுக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் பாறை பகுதிகளில் தாா்ச்சாலை போடப்பட்டுள்ளதால் பாறை பிடிப்பு இல்லாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே,இந்த சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னா்.

X
Dinamani
www.dinamani.com