சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

Published on

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.

அஸ்தம்பட்டி மண்டலம், தொங்கும் பூங்காவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவா்களுக்கு வழங்கும் உணவின் தரத்தையும், குறித்த நேரத்தில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிா எனவும் ஆணையா் நேரில் ஆய்வுசெய்தாா்.

மேலும், குமாரசாமிபட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவா் மற்றும் செவிலியா்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, மூக்கனேரியில் ரூ. 23 கோடியில் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பாா்வையிட்ட ஆணையா், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொறியாளா் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா.முரளிசங்கா், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com