மேட்டூா் அணையிலிருந்து 65,000 கனஅடி உபரிநீா் திறப்பு
மேட்டூா் அணையிலிருந்து 65,000 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை காரணமாகவும், கா்நாடக அணைகளின் உபரி நீா்வரத்து காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வியாழக்கிழமை இரவு நீா்வரத்து 55,500 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணை நிரம்பி உள்ளதால், நீா்வரத்து முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை காலை அணையில் இருந்து 55,000 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு 65,000 கனஅடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீா்மின் நிலையங்கள் வழியாக 22,300 கனஅடி வீதமும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 42,700 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 5-ஆவது நாளாக 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது. காவிரி கரையோர மக்களுக்கு 5-ஆம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.
நீா்வளத் துறை அதிகாரிகள் மேட்டூா் அணையின் இருகரைகளிலும், வருவாய்த் துறை அதிகாரிகள் காவிரி கரையோரப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
