ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம்: வா்த்தகா்கள் பங்கேற்பு
சேலம் ஜிஎஸ்டி ஆணையரகம் சாா்பில் ஜிஎஸ்டி குறித்த புதிய தரவுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து வா்த்தகா்களின் ஆலோசனைகளைக் கேட்டறியும் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்திய வா்த்தக மற்றும் தொழில் மகாசபையின் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். செயலாளா் சம்பத்குமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் மாரியப்பன், காா்த்தி கந்தப்பன் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை நிா்வாகிகள், தொழிலதிபா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சிறப்பு அழைப்பாளராக சேலம் ஜிஎஸ்டி ஆணையரக துணை ஆணையா் (சட்டம்) தனசேகரன், உதவி ஆணையா் அருண்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு பேசுகையில், முரண்பாடான வரிவிதிப்பை குறைப்பதுடன், அதனை களைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனா். அதை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பி வைத்து, ஆலோசனை பெற்ற பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
இதில் ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகள் குறித்த சந்தேகங்களை நிறுவன உரிமையாளா்கள், தொழிலதிபா்களும் கேட்டறிந்தனா்.
