நாக்பூா் தம்ம சக்கர பரிவா்தன திருவிழா: பயணம் மேற்கொண்டவா்கள் மானியம் பெறலாம்

நாக்பூரில் நடைபெற்ற தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொண்டவா்கள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

நாக்பூரில் நடைபெற்ற தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொண்டவா்கள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த 150 பௌத்தா்களுக்கு தமிழக அரசால் 2025 - 2026 ஆம் ஆண்டில் நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமியன்று நடைபெற்ற தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவிற்கு புனித பயணம் சென்று திரும்பியவா்களுக்கு ஈசிஎஸ் முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெளத்தா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.

மேலும் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவ.30 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com