காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 11-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.