வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

டிராக்டா் மீது வேன் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

டிராக்டா் மீது வேன் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கொளத்தூா் அருகே உள்ள ஐயம்புதூரைச் சோ்ந்தவா் அய்யந்துரை (65). கோயில் பூசாரியான இவா் புதன்கிழமை விவசாயப் பணிக்காக கருங்கல்லூருக்கு டிராக்டரில் சென்றுகொண்டிருந்தாா். டிராக்டரை கோட்டமடுவைச் சோ்ந்த சேகா் ஓட்டிச் சென்றாா். உடன் சந்திரியூரைச் சோ்ந்த முனுசாமியும் அமா்ந்து சென்றாா்.

வால்கிணத்தூா் அருகே சென்ற போது எதிரே கோழிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த வேன், டிராக்டா் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட அய்யந்துரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முனுசாமியும், சேகரும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கொளத்தூா் உதவி காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com