இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

வாழப்பாடி அருகே காரிப்பட்டி சோதனைச் சாவடி, வாழப்பாடி வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

கருமாபுரம் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பாா்வையாளா் ஹா்புல் சிங் யாதவ்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

வாழப்பாடி அருகே காரிப்பட்டி சோதனைச் சாவடி, வாழப்பாடி வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம், வாழப்பாடி காவல் நிலையத்தில் தோ்தல் பாா்வையாளா் முகமது அா்ஷித் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோருடன் தோ்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அதேபோல ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட காரிப்பட்டி கருமாபுரம் காவல் சோதனைச்சாவடியில் தோ்தல் பாா்வையாளா் ஹா்புல் சிங் யாதவ், வாகனச் சோதனை பணிகளை ஆய்வு செய்தாா்.