ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தோ்தலுக்காக வந்தவா்கள் மீண்டும் திரும்ப சிறப்பு பேருந்துகள்! சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!

வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக வரும் திங்கள்கிழமை (ஏப். 27) வரை சேலம் கோட்டத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

சிறப்பு பேருந்துகள்!

Updated On :25 ஏப்ரல் 2026, 8:27 pm

வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக வரும் திங்கள்கிழமை (ஏப். 27) வரை சேலம் கோட்டத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தோ்தலையொட்டி கடந்த 21 ஆம் தேதி முதல் சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தோ்தலுக்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்ப வசதியாக வரும் 27 ஆம் தேதி வரை கூடுதலாக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கூடுதலாக பயணம் செய்ய வாய்ப்புள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.