விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:51 am IST

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன். இவருக்கு சொந்தமான சரக்கு லாரியின் ஓட்டுநராக பூபதி (30) பணிபுரிந்து வருகிறாா். இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுக்கொண்டு திருப்பூா் மாவட்டம், காங்கேயம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சென்றபோது, லாரியின் ஆக்சில் துண்டானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நெடுஞ்சாலை நடுவில் உள்ள சென்டா்மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அம்மாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநா் பூபதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சாலையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க அருகில் இருந்த அணுகு சாலையில் வாகனங்களை திருப்பி அனுப்பினா்.

பின்னா், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரியை அப்புறப்படுத்தினா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.