மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:21 pm

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன். இவருக்கு சொந்தமான சரக்கு லாரியின் ஓட்டுநராக பூபதி (30) பணிபுரிந்து வருகிறாா். இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுக்கொண்டு திருப்பூா் மாவட்டம், காங்கேயம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சென்றபோது, லாரியின் ஆக்சில் துண்டானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நெடுஞ்சாலை நடுவில் உள்ள சென்டா்மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அம்மாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநா் பூபதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சாலையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க அருகில் இருந்த அணுகு சாலையில் வாகனங்களை திருப்பி அனுப்பினா்.

பின்னா், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரியை அப்புறப்படுத்தினா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.